பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவரும், ஓர் செய்தி... பள்ளி அல்லது கல்லூரி
மாணவர்கள் தற்கொலை. பள்ளி இறுதி தேர்வில் தோற்பவர்கள், தற்கொலை செய்கின்றனர் என்பது
போய், கஷ்டப்பட்டு படித்து, குடும்ப வறுமையோ, பிரச்னைகளோ பாதிக்காமல் வெற்றிகரமாக
கிராமப் பள்ளிகளிலேயே, பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்கள், பல்லாயிரம் கனவுகளோடு
கவுன்சிலிங் மூலம் மிகச் சிறந்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்து, சந்தோஷமாக
ஆரம்பிக்கும் ஓர் அடுத்த கட்ட வாழ்க்கை, அற்பாயுசாக முடிக்கப்பட என்ன
காரணம்?
ஆங்கில வழி கற்பித்தல் அல்லது பேசுதல் புரிந்து கொள்ள முடியவில்லையா? சக மாணவர்களின் கிண்டல், கேலி மனதை நோகச் செய்கிறதா அல்லது "அரியர்' வைப்பதால் தங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தால், இந்த அவசர முடிவு எடுக்கின்றனரா? பள்ளி அல்லது கல்லூரித் தேர்வில் தோல்வியடைந்தால், வானம் தலையில் விழுந்து நொறுங்கப் போவதுமில்லை; உலகம் அஸ்தமித்து விடப் போவதில்லை. தோல்வியடைந்த மாணவர்களுக்குத் தேவை, காயம்பட்ட புண்ணிற்கு மருந்திடுவதைப் போன்ற ஆறுதல் வார்த்தைகளும், அடுத்த தேர்வை தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வைக்கும் ஊக்க வழிகளும் தான். இதை உணராமல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல், பெற்றோர், தோழர்கள், ஆசிரியர்கள் நடந்து கொண்டால், வெளியுலக அனுபவமோ, பிரச்னைகளை எதிர்நோக்கும் வழிமுறைகளோ தெரியாத அப்பாவி மாணவச் செல்வங்கள், தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இது ஒருவித வெளிப்பாடு என்றால், இதற்கு நேர்மாறானது தான், நடத்தை முறை மாறுபாடு ஏற்படுவதும். பிறர் மீது தங்களால் காண்பிக்க முடியாத கோபத்தை, வெறுப்பை, தங்கள் மீதே திருப்பிக் கொள்வதன் மூலம், அதுவரை அவர்களுக்கு இருந்த குணநலன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எதற்கெடுத்தாலும், அடிதடி, ஆவேசம், கோபம், படிப்பை முழுதும் புறக்கணித்தல், தங்கள் கடமைகளை அடியோடு துறத்தல் போன்ற சமுதாயத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம், பருவ வயதில் பக்குவமடையாத இளையோர்களிடம் பிறர் நடந்து கொள்ளும் பண்பற்ற நடத்தைகளே. கற்றலில் மூன்று வகை உண்டு. தானே ஏட்டறிவு மூலம், ஞானத்தை வளர்ப்பது; ஆன்றோர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி அறிவது; பிறர் வாழ்க்கையில் பார்த்து, தன்னை புடம் போட்டுக் கொள்வது. ஆனால், நான்காவதாக உள்ள பட்டறிவு தான், பலருக்கும் பலமாக உள்ளது. தானாகவும் கற்றுக் கொள்ள மாட்டேன்; பிறர் சொல்வதையும் கேட்க மாட்டேன்; அடுத்தவர் படுவதைப் பார்த்தும், நான் மாற மாட்டேன் என்றிருப்பவர்கள், தங்கள் வாழ்வில் அடிபட்டுத்தான் திருந்துவர்.
இக்கால பெரியோர்களிடம் நான் பார்த்து வருந்தும் ஓர் விஷயம், நான் செய்தால் சரி; மற்றவர், குறிப்பாக, வாரிசுகள் இளம் பருவத்தில் தவறு செய்தால், தவறு எனும் விதண்டவாத போக்கு. இதைத் தான், "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என, வாதிடுவர் என்றனரோ? இக்கால மாணவர்கள், இன்டர்னல் மதிப்பெண்களை கணக்கில் கொண்டே பாடங்களை படிப்பதால், "சைக்கிள் டெஸ்ட்' எனப்படும் மாதத் தேர்வுகளை ஊன்றி படிப்பதில்லை. பள்ளிக் கல்லூரி மதிப்பெண்கள் தான், எதிர்கால வாழ்க்கை என்ற குறுகிய எண்ணம், மாணவர்கள் மனதிலிருந்து அடியோடு நீங்க வேண்டும். காரணம், ஆளுமைத்திறன், தனி மனித ஒழுக்கம், உண்மை, சமுதாயப் பண்பு, நேர்த்தியாக பழகும் முறை போன்ற குணநலன்களே, ஒருவரின் வெற்றிக்கு அடித்தளம். அதேபோல், ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் மாற்றங்களை, இயல்பாக எதிர்கொண்டு கடந்து வந்தால் தான், அடுத்த கட்ட வளர்ச்சி பரிணமிக்கும். மாற்றம் ஒன்று தான் நிரந்தரமானது; மாற்றத்திற்கு ஏற்ப, அதேநேரம் தனி மனிதப் பண்பையும் விடாமல் வளைந்து கொடுப்பவர்களே, வாழ்வில் வெற்றிப் பெற முடியும்.
சரி... இதை அடைவதற்கான வழி தான் என்ன? சுருக்கமாக, என்.எல்.பி., என அழைக்கப்படும், "நியூரோ லிங்கிஸ்டிக் புரோகிராமிங்' பயிற்சி முறைகள், மிகச் சுலபமாக மனிதர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்க வல்லவை. தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாக கூற விரும்பாதவர்கள் கூட, தாங்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என, இப்பயிற்சியாளரிடம் கூறினால், பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபட ஏற்ற பயிற்சி வழிகளை கொண்டு, அவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு கல்லூரியிலும், என்.எல்.பி., அறிந்த மனநில ஆலோசகர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். இது, ஏதோ பெயருக்கு கவுன்சிலர் என்றில்லாமல், முதலில் மனநல ஆலோசகர்களுக்கு அரசு அல்லது அந்தந்த கல்லூரி நிர்வாகம் மூலமே பயற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு, அவற்றை அவர்கள் குழு பயிற்சியாக, அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக நடத்த வேண்டும்.
ஒவ்வொரு முதலாமாண்டு மாணவர்களுக்கும், "எவாலுயேஷன் பார்ம்' மனநல ஆலோசகரால் ஏற்படுத்தப்பட்டு, அதில் மாணவரின் தனிப்பட்ட விவரங்கள், பெற்றோர் மற்றும் குடும்பப் பின்னணி, கல்லூரி அல்லது விடுதியில் அவர்கள் சந்திக்கும் நிறை, குறைகள் மாதந்தோறும் பதியப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனிநபர் ஆலோசனையும், பொதுவாக குழுப் பயிற்சியும் மாதம் ஒரு முறை என, சுழற்சி முறையில் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் அளிக்கப்படுமானால், மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகள் தடுக்கப்படும். நம் ஆழ்மனம் எப்போதும், நேர்மறையாக மட்டுமே சிந்திக்கும்; எதிர்மறையான வார்த்தைகளை அது பதிய வைக்காது.
உதாரணமாக, முடியாது, தெரியாது, இல்லை, கூடாது போன்ற எதிர்மறையான வார்த்தைகளை, நம் ஆழ்மனம் நேர்மறையாகவே பதிவு செய்யும். இதனால் தான் குழந்தைகளிடமோ அல்லது பெரியவர்களிடமோ, "இதை செய்யாதே' என்றால், அவர்கள் அதைச் செய்வர். இதையே மாற்றி, என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதைக் கூறினால், அது அவர்கள் மனதில் பதிந்து, நல்ல மாற்றத்தையும் உண்டு பண்ணும். எடுத்துக் காட்டாக, குழந்தைகளிடம், "மாடிப்படி ஏறாதே' என, கண்டிப்பதை விடுத்து, "மாடிப்படி ஏறும் போது ஜாக்கிரதையாக கைப்பிடிச் சுவரை பிடித்து ஏற வேண்டும்; அப்படி செய்தால், கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்கலாம்' என, சொல்ல வேண்டும். இதேபோல் பெற்றோர், தங்கள் பிள்ளைகள், "படிப்பதே இல்லை' என குறை கூறுவது, அவர்கள் ஆழ் மனதில் பதிவதால், அவர்கள் அதுவரை எப்படி படிக்கின்றனரோ, அப்படியோ தொடர்ந்து படிக்கின்றனர்.
உண்மையில் மாணவர்களை விட, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குத் தான், முதலில் இப்பயிற்சி முறைகள் வழங்க வேண்டும். அதேபோல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, என்.எல்.பி., பயிற்சி முறைகள் கற்று தரப்பட்டால், வீடு, குடும்பம் விட்டு, விடுதியில் தங்கி படிக்கும் சூழல் ஏற்படும் போது, கல்லூரி பருவத்தில் மிக சுலபமாக, அந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் மாறிக் கொள்வர். இன்று கல்வி என்பது, வியாபார நோக்குடனே பெரும்பாலும் அணுகப்படுவதால், படிப்பைத் தவிர, வேறெதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் பள்ளிக்காலம் முடிகிறது. இதனால், மதிப்பிற்கரிய மானுட உயிர், மிக மலிவாக துறக்கப்படுகிறது. இறந்த ஒவ்வொரு மாணவச் செல்வத்தை நம்பி, அக்குடும்பமும், சமுதாயமும் எத்தனை எதிர்பார்ப்புகளை, கனவுகளை சுமந்திருக்கும்... இதை துடைக்க வழி செய்யாமல், வல்லரசாக மாறி நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? இனியும் விழித்துக் கொள்ளா விட்டால், இழப்பு, குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நம் சமுதாயத்திற்கும் தான். இ-மெயில்: ramas_s@rediffmail.com
- எஸ்.ரமா, மனோதத்துவ நிபுணர்
ஆங்கில வழி கற்பித்தல் அல்லது பேசுதல் புரிந்து கொள்ள முடியவில்லையா? சக மாணவர்களின் கிண்டல், கேலி மனதை நோகச் செய்கிறதா அல்லது "அரியர்' வைப்பதால் தங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தால், இந்த அவசர முடிவு எடுக்கின்றனரா? பள்ளி அல்லது கல்லூரித் தேர்வில் தோல்வியடைந்தால், வானம் தலையில் விழுந்து நொறுங்கப் போவதுமில்லை; உலகம் அஸ்தமித்து விடப் போவதில்லை. தோல்வியடைந்த மாணவர்களுக்குத் தேவை, காயம்பட்ட புண்ணிற்கு மருந்திடுவதைப் போன்ற ஆறுதல் வார்த்தைகளும், அடுத்த தேர்வை தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வைக்கும் ஊக்க வழிகளும் தான். இதை உணராமல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல், பெற்றோர், தோழர்கள், ஆசிரியர்கள் நடந்து கொண்டால், வெளியுலக அனுபவமோ, பிரச்னைகளை எதிர்நோக்கும் வழிமுறைகளோ தெரியாத அப்பாவி மாணவச் செல்வங்கள், தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இது ஒருவித வெளிப்பாடு என்றால், இதற்கு நேர்மாறானது தான், நடத்தை முறை மாறுபாடு ஏற்படுவதும். பிறர் மீது தங்களால் காண்பிக்க முடியாத கோபத்தை, வெறுப்பை, தங்கள் மீதே திருப்பிக் கொள்வதன் மூலம், அதுவரை அவர்களுக்கு இருந்த குணநலன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எதற்கெடுத்தாலும், அடிதடி, ஆவேசம், கோபம், படிப்பை முழுதும் புறக்கணித்தல், தங்கள் கடமைகளை அடியோடு துறத்தல் போன்ற சமுதாயத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம், பருவ வயதில் பக்குவமடையாத இளையோர்களிடம் பிறர் நடந்து கொள்ளும் பண்பற்ற நடத்தைகளே. கற்றலில் மூன்று வகை உண்டு. தானே ஏட்டறிவு மூலம், ஞானத்தை வளர்ப்பது; ஆன்றோர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி அறிவது; பிறர் வாழ்க்கையில் பார்த்து, தன்னை புடம் போட்டுக் கொள்வது. ஆனால், நான்காவதாக உள்ள பட்டறிவு தான், பலருக்கும் பலமாக உள்ளது. தானாகவும் கற்றுக் கொள்ள மாட்டேன்; பிறர் சொல்வதையும் கேட்க மாட்டேன்; அடுத்தவர் படுவதைப் பார்த்தும், நான் மாற மாட்டேன் என்றிருப்பவர்கள், தங்கள் வாழ்வில் அடிபட்டுத்தான் திருந்துவர்.
இக்கால பெரியோர்களிடம் நான் பார்த்து வருந்தும் ஓர் விஷயம், நான் செய்தால் சரி; மற்றவர், குறிப்பாக, வாரிசுகள் இளம் பருவத்தில் தவறு செய்தால், தவறு எனும் விதண்டவாத போக்கு. இதைத் தான், "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என, வாதிடுவர் என்றனரோ? இக்கால மாணவர்கள், இன்டர்னல் மதிப்பெண்களை கணக்கில் கொண்டே பாடங்களை படிப்பதால், "சைக்கிள் டெஸ்ட்' எனப்படும் மாதத் தேர்வுகளை ஊன்றி படிப்பதில்லை. பள்ளிக் கல்லூரி மதிப்பெண்கள் தான், எதிர்கால வாழ்க்கை என்ற குறுகிய எண்ணம், மாணவர்கள் மனதிலிருந்து அடியோடு நீங்க வேண்டும். காரணம், ஆளுமைத்திறன், தனி மனித ஒழுக்கம், உண்மை, சமுதாயப் பண்பு, நேர்த்தியாக பழகும் முறை போன்ற குணநலன்களே, ஒருவரின் வெற்றிக்கு அடித்தளம். அதேபோல், ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் மாற்றங்களை, இயல்பாக எதிர்கொண்டு கடந்து வந்தால் தான், அடுத்த கட்ட வளர்ச்சி பரிணமிக்கும். மாற்றம் ஒன்று தான் நிரந்தரமானது; மாற்றத்திற்கு ஏற்ப, அதேநேரம் தனி மனிதப் பண்பையும் விடாமல் வளைந்து கொடுப்பவர்களே, வாழ்வில் வெற்றிப் பெற முடியும்.
சரி... இதை அடைவதற்கான வழி தான் என்ன? சுருக்கமாக, என்.எல்.பி., என அழைக்கப்படும், "நியூரோ லிங்கிஸ்டிக் புரோகிராமிங்' பயிற்சி முறைகள், மிகச் சுலபமாக மனிதர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்க வல்லவை. தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாக கூற விரும்பாதவர்கள் கூட, தாங்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என, இப்பயிற்சியாளரிடம் கூறினால், பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபட ஏற்ற பயிற்சி வழிகளை கொண்டு, அவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு கல்லூரியிலும், என்.எல்.பி., அறிந்த மனநில ஆலோசகர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். இது, ஏதோ பெயருக்கு கவுன்சிலர் என்றில்லாமல், முதலில் மனநல ஆலோசகர்களுக்கு அரசு அல்லது அந்தந்த கல்லூரி நிர்வாகம் மூலமே பயற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு, அவற்றை அவர்கள் குழு பயிற்சியாக, அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக நடத்த வேண்டும்.
ஒவ்வொரு முதலாமாண்டு மாணவர்களுக்கும், "எவாலுயேஷன் பார்ம்' மனநல ஆலோசகரால் ஏற்படுத்தப்பட்டு, அதில் மாணவரின் தனிப்பட்ட விவரங்கள், பெற்றோர் மற்றும் குடும்பப் பின்னணி, கல்லூரி அல்லது விடுதியில் அவர்கள் சந்திக்கும் நிறை, குறைகள் மாதந்தோறும் பதியப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனிநபர் ஆலோசனையும், பொதுவாக குழுப் பயிற்சியும் மாதம் ஒரு முறை என, சுழற்சி முறையில் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் அளிக்கப்படுமானால், மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகள் தடுக்கப்படும். நம் ஆழ்மனம் எப்போதும், நேர்மறையாக மட்டுமே சிந்திக்கும்; எதிர்மறையான வார்த்தைகளை அது பதிய வைக்காது.
உதாரணமாக, முடியாது, தெரியாது, இல்லை, கூடாது போன்ற எதிர்மறையான வார்த்தைகளை, நம் ஆழ்மனம் நேர்மறையாகவே பதிவு செய்யும். இதனால் தான் குழந்தைகளிடமோ அல்லது பெரியவர்களிடமோ, "இதை செய்யாதே' என்றால், அவர்கள் அதைச் செய்வர். இதையே மாற்றி, என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதைக் கூறினால், அது அவர்கள் மனதில் பதிந்து, நல்ல மாற்றத்தையும் உண்டு பண்ணும். எடுத்துக் காட்டாக, குழந்தைகளிடம், "மாடிப்படி ஏறாதே' என, கண்டிப்பதை விடுத்து, "மாடிப்படி ஏறும் போது ஜாக்கிரதையாக கைப்பிடிச் சுவரை பிடித்து ஏற வேண்டும்; அப்படி செய்தால், கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்கலாம்' என, சொல்ல வேண்டும். இதேபோல் பெற்றோர், தங்கள் பிள்ளைகள், "படிப்பதே இல்லை' என குறை கூறுவது, அவர்கள் ஆழ் மனதில் பதிவதால், அவர்கள் அதுவரை எப்படி படிக்கின்றனரோ, அப்படியோ தொடர்ந்து படிக்கின்றனர்.
உண்மையில் மாணவர்களை விட, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குத் தான், முதலில் இப்பயிற்சி முறைகள் வழங்க வேண்டும். அதேபோல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, என்.எல்.பி., பயிற்சி முறைகள் கற்று தரப்பட்டால், வீடு, குடும்பம் விட்டு, விடுதியில் தங்கி படிக்கும் சூழல் ஏற்படும் போது, கல்லூரி பருவத்தில் மிக சுலபமாக, அந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் மாறிக் கொள்வர். இன்று கல்வி என்பது, வியாபார நோக்குடனே பெரும்பாலும் அணுகப்படுவதால், படிப்பைத் தவிர, வேறெதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் பள்ளிக்காலம் முடிகிறது. இதனால், மதிப்பிற்கரிய மானுட உயிர், மிக மலிவாக துறக்கப்படுகிறது. இறந்த ஒவ்வொரு மாணவச் செல்வத்தை நம்பி, அக்குடும்பமும், சமுதாயமும் எத்தனை எதிர்பார்ப்புகளை, கனவுகளை சுமந்திருக்கும்... இதை துடைக்க வழி செய்யாமல், வல்லரசாக மாறி நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? இனியும் விழித்துக் கொள்ளா விட்டால், இழப்பு, குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நம் சமுதாயத்திற்கும் தான். இ-மெயில்: ramas_s@rediffmail.com
- எஸ்.ரமா, மனோதத்துவ நிபுணர்
No comments:
Post a Comment